Saturday 10 March 2012

காஜல் அகர்வால் புத்தம் புதிய புகைப்படங்கள்





இது தாண்டி சினிமா - அத்தியாயம் 6



அதென்ன பாலிவுட் கலாச்சாரம்?
பாலிவுட் நட்சத்திரங்கள் ஹோட்டல் பார்ட்டியை பெரிய அளவில் விரும்புவதில்லை. தங்கள் சுய சுதந்திரம் ஹோட்டல் பார்ட்டிகளால் பறிபோவதாக கவலைப்படும் அவர்கள் நெருக்கமான பார்ட்டிகளை வீடுகளில் தான் வைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் அதிக கூட்டம் வராது என்பது அவர்கள் சொல்லும் காரணம் என்றாலும் ஹீரோக்களுக்கே உரிய ஆணாதிக்கமும் அதில் உண்டு. அதாவது சம்பந்தப்பட்ட நடிகையின் வீட்டுக்கே போய் அந்த நடிகையின் குடும்பத்தினர் முன்னாலே நடிகையுட்ன் கொஞ்சிக்குலாவும் ஒருவித மாப்பிள்ளை முறுக்குதான்.
எல்லா நடிகைகளுமே தங்கள் வீட்டில் விரும்பும் ஹீரோக்களுக்கு பார்ட்டி கொடுத்தே ஆகவேண்டும். சில சமயம் இந்த ஹோம்லி மப்பாட்டம் வில்லங்கத்தையும் ஏற்படுத்திவிடும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.....
கோலிவுட்டில் இளைய நடிகரோடு ஜோடி போட்ட ஃப்ரியங்கா சோப்ரா இப்போது பாலிவுட்டில் உச்ச நாயகிகளுள் ஒருவர். அவர் தன் வீட்டில் இந்த கசாமுசா காக்டெயில் அடிக்கடி நடத்துவார். அப்படி சமீபத்தில் ஒரு பார்ட்டி கொடுத்தார். அதில் பாலிவுட்டின் முக்கிய புள்ளிகளெல்லாம் கலந்து கொண்டார்கள். இரவில் ஆரம்பிக்கிற குடியும், கூத்தும், விடிகாலை வரை கூச்சலாக... முனகலாக முடியும். விடிய விடிய ஊத்து. விடிஞ்ச பின்னாடி போர்த்து... என்கிற மாதிரி ராத்திரியெல்லாம் கூத்து நடத்திவிட்டு காலியில் தான் படுக்கப் போவார்கள். மத்தியானத்துக்கு மேல் எழுந்து தொழிலை பார்க்கப் போவார்கள். அப்படித்தான் அன்றும் ஃப்ரியா யங்கா சூப்பரா தன் வீட்டில் பார்ட்டியை தொடங்கிவைத்தார் நடிகை.
ஃபுல் மப்பில், ஃபுல் மியூஸிக் போட்டு ஆட... அந்த அடுக்குமாடியே ’ஒனக்கே இது அடுக்குமாடி?’ என கொந்தளித்துவிட்டது. அதிகாலைவரை போட்ட கெட்ட ஆட்டத்தால், உல்லாச கூச்சலால், வாலிப அன்பர்களால் சும்மா இருக்கமுடியாமல் சுகமான நெளிச்சல் நெளிந்தார்கள். வயோதிக அன்பர்களோ தூங்க முடியாமல் திண்டாடினார்கள். கடைசியில் பொறுமையிழந்த அக்கம் பக்கத்தார்... அந்த நடிகை வீட்டு கதவைத்தட்டி எச்சரிக்க.... அப்புறமும் அடங்கவில்லை. தகவல் போலீஸுக்குப் போனது. போலீஸ் சத்தம் கேட்டதும் ஆங்காங்கே ஓடிப்போய் பதுங்கினார்கள். அந்த நடிகை மீது வழக்குத் தொடர்ந்து அபராதம் விதித்தார்கள். இப்படி கூச்சலும் குழப்பமும் நிறைந்த... ஹோம் விருந்துதான் பாலிவுட் பார்ட்டி கலாச்சாரம்.
அப்பாவை ஷுட்டிங்கிற்கு வரவேண்டாம் எனச் சொன்னதற்கே பெரும் சிக்கலாகிவிட்டது சுட்டும் விழிச் சுடருக்கு. ஆனால் அவரிடம் ஹோம் பார்ட்டி மேட்டரைச் சொன்னதும் தண்ணி போடாமலேயே ஆடித்திர்த்துவிட்டர்.
‘பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமாம். இப்படி ஹோம் பார்ட்டி வைத்தால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்குமாம்...’ எனச் சொல்ல... ‘கோலிவுட் வாவாங்குது. பேசாமா அங்கேயே போயிடலாம். மூட்டயக்கட்டு’ என கொதித்துவிட்டார் அப்பாக்காரர்.
அப்பாவின் எதிர்ப்பை மீறியும் தனிக்குடித்தனம் போகவைத்தது ஹீரோக்களின் டார்ச்சர்.
‘நாங்க இருக்க வீடு 20வது மாடி. பட ஒப்பந்தத்திற்காக வர்றவ்ங்க ரொம்ப சிரமப்படுறதால்... தனி வீடு பாத்திருக்கேன்’ என சுடர் விளக்கம் சொன்னாலும் கிட்டத்தட்ட இது குடும்பத்தை பிரித்தது போலத்தானே.
தனி வீட்டில் பால் காய்ச்சுனாரோ... பீர் காய்ச்சினாரோ.... அதை விடுவோம்! அடுத்த சங்கதிக்கு வருவோம்.
அடுத்த சங்கதி..... ரொம்ப கொடுமை
( அடுத்த ஸீன்...)

பத்து நாள் விஷாலுக்கு... பத்து நாள் என்டிஆருக்கு - த்ரிஷாவின் மேனேஜ்மென்ட்!



த்ரிஷாவுக்குப் படங்களே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதோ கல்யாணம் என்கிறார்கள்.
ஆனால் இரண்டையுமே வெற்றிகரமாகப் பொய்யாக்கி வருகிறார்.

இப்போது அவர் இரண்டு பெரிய படங்களில் படு பிஸி. ஒரு படம் தெலுங்கில். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக.

இன்னொரு படம் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் சமரன்.

இரண்டு படங்களும் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. எப்படி சமாளிக்கிறார்?

இதுபற்றி த்ரிஷா கூறுகையில், "அது ரொம்ப சிம்பிள்... பத்து நாட்கள் விஷாலுடன் தமிழ் படத்திலும் பத்து நாட்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படத்திலும் மாறி மாறி நடித்துக் கொடுக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு மேல் நடிக்கிறேன். இப்போது வரைக்கும் என் அழகு குறையவே இல்லை என்று பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

காரணம், அழகை எப்படி பாதுகாக்கவேண்டும் என்ற ரகசியம் எனக்கு தெரியும். அதற்காக நிறைய கஷ்டப்படுகிறேன்.

அதே நேரம் மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை. சினிமா தவிர பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் இல்லாமல் செல்லவே பிடிக்கிறது," என்றார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி













நமிதாவின் புத்தம் புதிய புகைப்படங்கள்